கிருஷ்ணகிரி: ஒரே நாளில் 266 பேர் பாதிப்பு - 3 பேர் உயிரிழப்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 3 பேர் பலியானதுடன், 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
HIGHLIGHTS
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 3 பேர் பலியானதுடன், 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 38 வயது ஆண், 50 வயது ஆண், 70 வயது மூதாட்டி ஆகியோர் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதன் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 260 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 369 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலன் அளிக்காமல் 3 பேர் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 36 ஆயிரத்து 888 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 34 ஆயிரத்து 299 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 2 ஆயிரத்து 329 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 260 ஆக உள்ளது.