/* */

நகை கடன் தள்ளுபடி நாள் வரை வட்டி வழங்க கோரி பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் தள்ளுபடி நாள் வரை வட்டி வழங்க கோரி தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

நகை கடன் தள்ளுபடி நாள் வரை வட்டி வழங்க கோரி பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தனபால் தலைமை வகித்தார் செயலாளர் செந்தில் பொருளாளர் ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மத்திய கூட்டுறவு வங்கியில் பொதுமக்களின் வைப்பு தொகையில் இருந்து கடன் பெற்று நகை கடன் வழங்கி வரும் பட்சத்தில் தமிழக அரசின் நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் நவம்பர் மாதம் வரை வட்டி வழங்கப்படும் என அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொடக்க கூட்டுறவு வங்கிகள் பெரும் இழப்பை சந்திக்கும் எனவே அரசு தள்ளுபடி நாள் வரை வட்டி வழங்க வேண்டும்,விவசாயிகள் பயிர் கடன் வழங்குவது குறித்து மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் தொடக்க கூட்டுறவு சங்கங்களுக்கு தன்னிச்சையாக குறியீடு நிர்ணயம் செய்து நிர்ப்பந்தம் செய்வதையும் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதை கண்டித்தும், தமிழக அரசின் சிறப்பு பொங்கல் தொகுப்பை நியாய விலைக் கடைகள் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது இவற்றில் பொருட்கள் மொத்தமாக வழங்கும் போது சில இடங்களில் எடை குறைவு ஏற்படுவதால் அரசு தனித்தனியாக பொருட்களை பேக்கிங் செய்து வழங்க வேண்டும் என்பன 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்களை எழுப்பினர் .

Updated On: 21 Dec 2021 4:16 AM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  6. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  9. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...