/* */

பணம் வைத்து சூதாட்டம்: 8 பேர் கைது - ரூ.11 ஆயிரம் பறிமுதல்

ஓசூர் சிப்காட் அருகே பணம் வைத்து சூதாடிய 8 பேரை கைது செய்த போலீசார், 11 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

பணம் வைத்து சூதாட்டம்: 8 பேர் கைது -  ரூ.11 ஆயிரம் பறிமுதல்
X

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீஸ் எஸ்எஸ்ஐ காளியப்பன் மற்றும் போலீசார், மூக்காண்டப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன், பசிகுமார், வீரபத்திரன், சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்துனர். அவர்களிடம் இருந்த பணம் ரூ. 10,170ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல், சூளகிரி எஸ்ஐ கணேஷ்பாபு மற்றும் போலீசார், செம்பரசனப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அதே பகுதியில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த எல்லப்பா, பாஸ்கர்,, முரளி, பீமாண்டப்பள்ளி சீனிவாசன் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் ரூ. 770ஐ பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேற்று, காவல்துறையினரின் ரோந்தின்போது, இருவேறு இடங்களில் பணம் வைத்து சூதாடிக் கொண்டிருந்த 8 பேர் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து ரூ. 11 ஆயிரம் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Updated On: 20 April 2021 10:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  2. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  3. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  4. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  5. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!
  6. தேனி
    வடமாநிலத்தவர் நமக்கு கற்றுத்தருவது என்ன?
  7. தென்காசி
    திமுக சார்பில் நீர் மோர் பந்தல் தொடங்கி வைத்த அமைச்சர் கே கே எஸ் எஸ்...
  8. கடையநல்லூர்
    தமிழகக் கேரள எல்லைப் பகுதியில் விளை நிலத்திற்குள் புகுந்த ஒற்றை காட்டு...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் கோவை காவல் துறையினர் வழக்குப்பதிவு
  10. குமாரபாளையம்
    குடும்ப வறுமையை பயன்படுத்தி சிறுநீரகம் விற்க மூளைச்சலவை..!