Begin typing your search above and press return to search.
குளித்தலை அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்
குளித்தலை அருகே மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர்உயிரிழந்தது, சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
HIGHLIGHTS
கரூர் மாவட்டம் குளித்தலை வட்டம், முதலைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவபெருமாள் மகன் முனியப்பன் வயது 20. இவர் திருச்சி ஈவேரா கல்லூரியில், பிகாம் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். முனியப்பன், வீட்டின் அருகே கால் இடறி அங்கிருந்த மோட்டார் வயரின் மீது விழுந்தார். அப்போது கம்பியை பிடித்த அவரை, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மயங்கி கிடந்துள்ளார்.
இதை பார்த்த அவரது உறவினர், அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டுசென்று சேர்த்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளார். இறந்துபோன முனியப்பன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உறவினர் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், குளித்தலை போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.