/* */

விஸ்வநாதபுரியில் சாலை வசதி கோரி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

குளித்தலை அருகே விஸ்வநாதபுரியில் முறையான சாலை வசதி அமைத்து தராத்தைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விஸ்வநாதபுரியில் சாலை வசதி கோரி மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
X

சாலை வசதி செய்து தரக் கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே மருதூர் பேரூராட்சிக்குட்பட்ட விஸ்வநாதபுரம் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர், இவர்கள் நெடுஞ்சாலையிலிருந்து கிராமத்திற்கு செல்வதற்கு சுமார் 2 கிலோ மீட்டர் சாலை உள்ளது. இந்த சாலையை புதுப்பித்து தர வலியுறுத்தி விஸ்வநாதபுரி கிராம மக்கள் பேரூராட்சி முதல் ஆட்சியர் அலுவலகம் வரை மனு அளித்துள்ளனர். பல ஆண்டுகளாக சாலை புதுப்பிக்கப்படாமல் உள்ளதால், தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கிராமத்துக்கு செல்லும் சாலை மிக மோசமாக சேறும் சகதியுமாக உள்ளது.

இந்தசாலை வழியாகவே பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் சாலை வசதி செய்து தரப்படாததைக் கண்டித்து விஸ்வநாதபுரம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த குளித்தலை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சமாதானப்படுத்தினர். பிரச்சனைகளை பேரூராட்சி நிர்வாகத்திடம் பேசி தீர்த்துக் கொள்ள அறிவுறுத்தி சாலை மறியலை கைவிட செய்தனர். அதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Updated On: 9 Nov 2021 9:30 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...