/* */

கோவக்குளத்தில் இருசக்கர வாகன விபத்து: 2 பேர் பலி, ஒருவருக்கு பலத்த காயம்

கிருஷ்ணராயபுரம் அருகே கோவக்குளத்தில் 2 இருசக்கர வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.

HIGHLIGHTS

கோவக்குளத்தில் இருசக்கர வாகன விபத்து: 2 பேர் பலி, ஒருவருக்கு  பலத்த காயம்
X

உயிரிழந்தவர்களை அதிர்ச்சியுடன் பார்க்கும் உறவினர்கள்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள கிருஷ்ணராயபுரம் கிழக்கு காலனியை சேர்ந்த பாண்டியன் மகன் பிரசாந்த்(34). பிரசாந்த் சமையல் வேலை செய்பவர். பிரசாந்தும் அதே பகுதியைச் சேர்ந்த ஆண்டியப்பன் மகன் புஷ்பராஜ்(35) இருவரும் மேட்டு மகாதானபுரத்தில் இருந்து இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணராயபுரத்துக்கு சென்றனர்.

கோவக்குளம் என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வீரணம்பட்டியை சேர்ந்த தங்கவேல் மகன் சுப்பிரமணி(34) ஓட்டி வந்த இருசக்கர வாகனமும்,மோதிக் கொண்டன. இதில், பிரசாந்த் மற்றும் சுப்பிரமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த புஷ்பராஜ் கரூர் அரசு மருத்துவ கல்லூரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். தகவலறிந்த மாயனூர் காவல் நிலைய ஆய்வாளர் தமிழரசி இறந்த 2 உடல்களையும் கைப்பற்றி குளித்தலை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் தொடர்பாக மாயனுர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 4 Oct 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  2. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  3. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  5. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  8. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...