Begin typing your search above and press return to search.
பட்டா பிரச்னையில் குழந்தைகளுடன் தீக்குளிக்க முயற்சித்த பெண்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பட்டா பிரச்சனை தொடர்பாக பெண் ஒருவர் தனது இரண்டு மகள்கள், ஒரு மகனுடன் தீ குளிக்க முயற்சித்தார்.
HIGHLIGHTS
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா மோளப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் இடம் பிரச்சினை சம்பந்தமாக, பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்து உள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டுக்காரர் எங்கள் அனுமதியின்றி பட்டா வழங்கக்கோரி எப்படி மனு அளித்தீர்கள் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து தனது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த ராஜலட்சுமி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.