/* */

கரூர் மாவட்டத்தில் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்

கரூர் மாவட்டத்தில் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம்
X

கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு.

கரூர் மாவட்டத்தில் கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோழி வெள்ளைக்கழிச்சல் நோய் என்பது ஒரு வகை வைரஸ் நச்சுயிரியினால் ஏற்படும் தொற்று நோயாகும். இந்நோய் தீவனம், குடிநீர், காற்று மூலம் பரவும் தன்மை கொண்டது. நோய் கண்ட கோழிகளில் வெள்ளையாகவும், பச்சையாகவும் கழிச்சல் காணப்படும். மேலும், மூச்சுத்திணறல், நடுக்கம், வாதம், சோர்வு மற்றும் தீவனம் உட்கொள்ளும் அளவு குறைந்தும் காணப்படும். இந்நோய் தாக்கிய கோழிகளில் இறப்பு அதிகமாக இருக்கும். கோழிக்குஞ்சுகளுக்கு 2 மாத வயதில் வெள்ளைக் கழிச்சல் நோய் தடுப்பூசி போடுவதன் மூலம் இந்நோய் வராமல் தடுக்கலாம். இந்நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் இருவார தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

கரூர் மாவட்டத்திற்கென 2.10 லட்சம் டோஸ்கள் வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி பெறப்பட்டு அனைத்து கால்நடை நிலையங்களிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 01.02.2024 முதல் 14.02.2024 வரை கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை பெருமருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை கிளைநிலையப் பகுதிகளில் இலவசமாக கோழி வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசி போடப்பட இருக்கிறது. இத்தடுப்பூசியினை 2 மாத வயது முடிவடைந்த கோழிக்குஞ்சுகள் முதல் அனைத்து கோழிகளுக்கும் போடலாம்

எனவே, விவசாயிகள் மற்றும் கோழி வளர்ப்போர் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி கோழி வெள்ளைக்கழிச்சல் நோய் தடுப்பூசியினை இலவசமாக தங்கள் கோழிகளுக்கு போட்டுக்கொண்டு கோழிகளை இறப்பிலிருந்தும், பொருளாதார இழப்பிலிருந்தும் பாதுகாத்து பயன் அடையுமாறு கேடுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

Updated On: 2 Feb 2024 11:40 AM GMT

Related News

Latest News

  1. மயிலாடுதுறை
    நடுக்கடலில் ரு தரப்பு மீனவர்கள் சண்டை! இருவர் காயம்
  2. குமாரபாளையம்
    கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய
  3. தொழில்நுட்பம்
    A1 குரல் குளோனிங் மூலம் மோசடி : கவனமாக இருக்க போலீஸ் அறிவுரை..!
  4. நாமக்கல்
    நாயை அடித்தவரை தாக்கியவர்களை கைது செய்யக்கோரி போலீஸ் நிலையம்
  5. தமிழ்நாடு
    பள்ளி திறப்பு தள்ளி வைப்பு? அமைச்சர் ஆலோசனை..!
  6. லைஃப்ஸ்டைல்
    karma related quotes -‘கர்மா’ தமிழ் இலக்கியத்தில் ஒரு வழிகாட்டும்...
  7. இந்தியா
    மனைவியின் சீதனத்தில் கணவருக்கு உரிமையில்லை..!
  8. லைஃப்ஸ்டைல்
    DP யில் வைக்கப்படும் வாழ்க்கை மேற்கோள்கள் தமிழில்!
  9. அரசியல்
    கட்சி நிர்வாகிகள் மீது கை வைக்க பயப்படும் எடப்பாடி..!
  10. லைஃப்ஸ்டைல்
    Dont trust girls quotes-பெண்களை நம்பவேண்டாம் என்ற மேற்கோள் சரியானது...