/* */

கொடுக்கல், வாங்கல் பிரச்னை: நிதி நிறுவன அதிபர் தூக்கிட்டு தற்கொலை

வாங்கல் அருகே நிதி நிறுவன பங்குதாரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்தார்.

HIGHLIGHTS

கொடுக்கல், வாங்கல் பிரச்னை: நிதி நிறுவன அதிபர் தூக்கிட்டு தற்கொலை
X

பைல் படம்.

சங்கரம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(39). இவரும் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி(40), முருகேசன்(43) ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளனர். அதனடிப்படையில் சுரேஷ்குமாருக்கு இருவரும் பணம் தர வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சுரேஷ்குமார் உள்ளூரை சேர்ந்த சிலரின் உதவியுடன் சுப்பிரமணி மற்றும் முருகேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுப்பிரமணி பணம் தர மறுத்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த சுரேஷ்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை கண்ட அவரது மனைவி தனலட்சுமி அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுரேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாங்கல் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Updated On: 19 Nov 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  2. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  3. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  4. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  5. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  6. மேலூர்
    மதுரை அருகே யானைமலை ஒத்தக்கடையில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்
  7. ஈரோடு
    ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் "உத்பவ் 2024"...
  8. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  9. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  10. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...