கொடுக்கல், வாங்கல் பிரச்னை: நிதி நிறுவன அதிபர் தூக்கிட்டு தற்கொலை
வாங்கல் அருகே நிதி நிறுவன பங்குதாரர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ஒருவர் தூக்கிட்டு உயிரிழந்தார்.
HIGHLIGHTS
சங்கரம்பாளையத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(39). இவரும் அதே ஊரை சேர்ந்த சுப்பிரமணி(40), முருகேசன்(43) ஆகியோர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவையில் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளனர். அதனடிப்படையில் சுரேஷ்குமாருக்கு இருவரும் பணம் தர வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சுரேஷ்குமார் உள்ளூரை சேர்ந்த சிலரின் உதவியுடன் சுப்பிரமணி மற்றும் முருகேசனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் சுப்பிரமணி பணம் தர மறுத்துள்ளார்.
இதனால் விரக்தியடைந்த சுரேஷ்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதை கண்ட அவரது மனைவி தனலட்சுமி அவரை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சுரேஷ்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வாங்கல் இன்ஸ்பெக்டர் கண்ணதாசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.