/* */

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது.

HIGHLIGHTS

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி
X

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இன்று முதல் கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.

கரூர் நாடாளுமன்ற தொகுதி வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் இன்று அளிக்கப்பட்டது.

வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதியில் வேடசந்தூர் அரசு ஆண்கள் நிலைப்பள்ளி, அரவக்குறிச்சி சட்டமன்றத்தொகுதியில் வள்ளுவர் மேலாண்மை பயிற்சி கல்லூரி, கரூர் சட்டமன்றத் தொகுதியில் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி, கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் புலியூர் ராணிமெய்யம்மை மேல்நிலைப்பள்ளி மற்றும் செட்டிநாடு இராணி மெய்யம்மை மெட்ரிக் பள்ளி, குளித்தலை சட்டமன்றத்தொகுதியில் குளித்தலை கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, மணப்பாறை, விராலிமலை சட்டமன்றத் தொகுதி என மொத்தம் 5135 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

கரூர் எம்பி தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், கரூர் மாவட்ட கலெக்டருமான தங்கவேல் பேசுகையில், தேர்தல் பணியில் பட்டுள்ள அனைவரும் வாக்குச்சாடி மையங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளர் வாக்குப்பதிவு தணிக்கை இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்களை எவ்வாறு கையாளுவது, வாக்குப்பதிவுக்கு முன்னர் மாதிரி வாக்கு பதிவு வாக்கு பதிவு நடத்துவது எப்படி என்பதை இந்த பயிற்சி வகுப்பின் மூலம் தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்.

85 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வகையில் படிவம் 12 வழங்கப்பட்டுள்ளது. மேலும் படிவம் பெறாமல் வரும் மற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச்சாவடியில் தேவையான உதவிகளை நீங்கள் செய்ய வேண்டும். இந்த பயிறசி மையங்களில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையத்தினை அனைவரும் பார்த்து உங்கள் பணி குறித்து மேலும் அறிந்துகொள்ளலாம் என்றார்.

மேலும் வீடியோ கான்பரென்சிங் மூலம் ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் பணி புரியும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். மேலும் திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் காவல்நிலையம் அருகில் வேடசந்தூர் பிரிவு சாலையில் நடைபெற்ற வாகன சோதனைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Updated On: 24 March 2024 3:54 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை