Begin typing your search above and press return to search.
கரூர் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா பெருந்தொற்று பாதிப்பு
கரூர் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
HIGHLIGHTS
கரூர் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்றை கண்டறியும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட பரிசோதனையில், புதியதாக 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து இன்று 11 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சிகிச்சை பலனின்றி இன்று ஒருவர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 175 பேர், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சையிலும், வீடுகளில் தனிமைப்படுத்ததிலும் உள்ளனர்.