/* */

கரூர் அருகே 2 கார் மோதி விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்

கரூர் அருகே எதிர் எதிரே வந்த இரு கார்கள் மோதிய விபத்தில் ஒருவர் பலியாகினர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

HIGHLIGHTS

கரூர் அருகே 2 கார் மோதி விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
X

விபத்தில் சேதமடைந்த கார் மற்றும் பஸ்.

கோவையிலிருந்து கரூர் வழியாக ராசிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் கரூர் எல்லைகாட்டுவலசு அருகே வந்தபோது எதிரே வந்த மற்றோரு கார் மீது மோதியது. எதிரே வந்த காரை தாராபுரம் பகுதியினை சேர்ந்த தூரம்பாடி கருப்புசாமி என்பவரது மகன் லோகநாதன் ஒட்டி சென்றுள்ளார். இந்நிலையில் இந்த கார் மோதிய விபத்தினையும் தாண்டி மற்றொரு அரசு பேருந்தில் கார் மோதி நின்றது. இந்த அரசுப்பேருந்தானது, ஊட்டியிலிருந்து திருச்சிக்கு கரூர் வழியாக செல்ல முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த இருவரது நிலை மோசமானதாக உள்ளதாகவும், ஒருவர் உயிரிழந்ததாக தெரியவருகின்றது., உயிரிழந்தவர் யார் என்ற விவரம் சரியாக தெரியவரவில்லை. விபத்தில் படுகாயமடைந்த 3 பேரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 18 Jan 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  2. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  3. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  4. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  5. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  6. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  7. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...
  8. ஆன்மீகம்
    அன்பின் வடிவமாக எளிமையின் சின்னமாக இருப்பவர் சாய் பாபா..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூரில் அ.தி.மு.க. சார்பில் திறக்கப்பட்ட நீர்மோர் பந்தல்
  10. தொழில்நுட்பம்
    Realme C65 5G புதிய பட்ஜெட் போன்... சக்தி அதிகமா?