Begin typing your search above and press return to search.
சாலை மறியல் -மாற்றுத்திறனாளிகள் கைது
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 3 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 75 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மூன்று அம்ச கோரிக்கைகளான தற்போது வழங்கப்படும் உதவித் தொகை ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக மூன்று ஆயிரம் ரூபாயாக உயர்த்திடவும், மிகவும் பாதிப்படைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை 3 ஆயிரம் ரூபாயிலிருந்து 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்திடவும், தனியார் நிறுவன வேலை வாய்ப்பில் உரிய இட ஒதுக்கீட்டை உறுதி செய்யவும் அரசு முன்வர வேண்டும் என கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட 75 க்கும் மேற்பட்டோர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.