/* */

மினி லாரி மோதியதில் இரு மூதாட்டிகள் உயிரிழப்பு

அரவக்குறிச்சி அருகே மினி லாரி மோதியதில் பேருந்திற்காக காத்திருந்த 2 மூதாட்டிகள் பலத்த காயமுற்று உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

மினி லாரி மோதியதில் இரு மூதாட்டிகள் உயிரிழப்பு
X

விபத்துக்குள்ளான மினி லாரி.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி கொடையூரை சேர்ந்த பெரியம்மாள் (70) மற்றும் ஆறு ரோடு பகுதியை சேர்ந்த லட்சுமி (65) ஆகிய இருவரும் ஆறு ரோடு தனியார் மண்டபம் எதிரில் கரூர் உழவர் சந்தை செல்வதற்காக பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது திண்டுக்கல்லிருந்து கரூர் நோக்கி வந்த மீன் ஏற்றிச் செல்லும் சரக்கு வாகனம் நிலைதடுமாறி மோதியது. இதில் இருவரும் பலத்த காயமுற்று சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவரின் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் நிலை தடுமாறி வந்த மினி லாரி சாலையின் இடது ஓரத்தில் கவிழ்ந்தது. இதுகுறித்து அரவக்குறிச்சி காவல் நிலையப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Updated On: 3 Nov 2021 6:00 PM GMT

Related News

Latest News

  1. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  2. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  3. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  4. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  5. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  6. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  7. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!
  8. சினிமா
    யாரிந்த அன்ஷித்தா..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 கோமாளி..!
  9. ஈரோடு
    அந்தியூரில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர்
  10. தமிழ்நாடு
    டிஆர்பி தேர்வுக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு