/* */

கரூரை குளிர்வித்த மழை... சூரியனின் சூடு தணிந்தது!

கரூர் மாவட்டத்தில் இன்று பரவலாக பெய்த மழையால், கடும் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கடுமையான வெப்பநிலை நிலவியது. கரூர் மாவட்டத்தில் உள்ள க.பரமத்தி பகுதி தமிழக அளவில் அதிக வெப்பநிலை நிலவும் பகுதிகளில் ஒன்றாக இருந்தது. அந்த பகுதியில் அதிக அளவில் கல்குவாரிகள் உள்ளதால், பூமியிலிருந்து வெப்ப அதிக அளவில் வெளியேறி உயர்ந்த பட்ச வெப்பநிலை நிலவியது.

கரூர் மாவட்டம் முழுவதும் நிலவிய கோடை வெப்பத்தால், குழந்தைகள், வயதானவர்கள் பெரிதும் அவதிப்பட்டனர் மதிய வேளையில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. கோடை வெப்பத்தை தணிக்க மழை பெய்யாதா என்று பலரும் ஏங்கிக் கிடந்தனர்.

இந்நிலையில், இன்று காலை திடீரென கருமேகங்கள் சூழ்ந்தன; சற்று நேரத்தில் மழை பொழிய ஆரம்பித்தது கரூர் நகரம், தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், காந்திகிராமம் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது.

இதனால் கடந்த சில தினங்களாக நிலவிவந்த வெப்பமான சூழ்நிலை குறைந்து, குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.

Updated On: 27 April 2021 8:49 AM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!