/* */

கனமழையால் குமரி திற்பரப்பு அருவியில் 2வது நாளாக காட்டாற்று வெள்ளம்

குமரியின் குற்றாலம் எனப்படும், திற்பரப்பு அருவியில் இரண்டாவது நாளாக காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

HIGHLIGHTS

கனமழையால் குமரி திற்பரப்பு அருவியில் 2வது நாளாக காட்டாற்று வெள்ளம்
X

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில், வெள்ளம் கொட்டுகிறது.  

கன்னியாகுமரி மாவட்டத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகளுக்கு பெருமளவில் நீர் வரத்து அதிகரித்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையில் இருந்து 15 ஆயிரம் கன அடி நீரும் 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையில் இருந்து 8 ஆயிரம் கன அடி நீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. கோதையாறு, திற்பரப்பு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.

இரண்டு அணைகளில் இருந்தும் 23 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால், குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில், வெள்ளப்பெருக்கு காட்டாற்று வெள்ளமாக மாறி உள்ளது. அருவியில் இருந்து வெளியேறும் நீர் ஓடு பாதையில் உள்ள பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 17 Oct 2021 3:28 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை