/* */

இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறிய புது மாப்பிள்ளை பலி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆற்றின் கரையோரம் இருசக்கர வாகனத்தில் சென்று நிலை தடுமாறிய புது மாப்பிள்ளை பலியானதால் சோகம்.

HIGHLIGHTS

இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறிய புது மாப்பிள்ளை பலி.
X

கன்னியாகுமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் புதுகிராமம் பகுதியைச் சேர்ந்த அருள் கிங்ஸ்டன் இவரது மகன் லிவிங்ஸ்டன் (21). இவருக்கு திருமணமாகி ஒன்னரை மாதமே ஆகி உள்ளது. இந்நிலையில் தனது மோட்டார் சைக்கிளில் ஞானம் பகுதியில் உள்ள ஆற்றங்கரை வழியாக சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து எதிர்பாராதவிதமாக தவறிவிழுந்த லிவிங்ஸ்டன் தலையில் படுகாயமடைந்து அரை மணி நேரமாக உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

நீண்ட நேரம் கழித்து அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி லிவிங்ஸ்டன் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 9 July 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புலிக்கு வாலாக இருப்பதைவிட எலிக்கு தலையாக இரு..!
  2. லைஃப்ஸ்டைல்
    கர்ப்பம் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 14 அரசு பள்ளிகள் உள்பட 60...
  4. நாமக்கல்
    நாமக்கல் குறிஞ்சி மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தேர்வில் 100 சதவீதம்...
  5. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் போக்குவரத்து காவல்துறை சார்பில் நிழற் பந்தல் அமைப்பு
  6. லைஃப்ஸ்டைல்
    சிதைந்த குடும்பம்..களைந்த கூடு..!
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் 89 சதவீதம் தேர்ச்சி
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் ஆகாய கன்னி அம்மன் ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம்
  9. ஈரோடு
    கொடுமுடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகங்களில் ஈரோடு...
  10. ஈரோடு
    கோபி: கணக்கம்பாளையம் அருகே காட்டுப்பன்றி தாக்கி மூதாட்டி படுகாயம்