/* */

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது.

அரசு மதுபான கடைகளில் இருந்து மது வாங்கி அதனை பதுக்கி வைத்து விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது.
X

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை மதுவிலக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜரெத்தினம் தலைமையிலான போலீசார் கழுவன்திட்டை பகுதியில் ரோந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் வாணியூர் பகுதியை சேர்ந்த விக்னேஷ்(25) என்பதும், சட்ட விரோதமாக மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து சோதனை மேற்கொண்ட போலீசார் சட்டவிரோதமாக விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த 50 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் விக்னேஷ் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 17 Jun 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  2. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  3. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  4. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  7. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  8. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  10. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...