/* */

வனப்பகுதிக்குள் நாய்களை வைத்து விலங்குகளை வேட்டையாடியவர்கள் கைது

கன்னியாகுமரியில் தடைசெய்யப்பட்ட வனப்பகுதிக்குள் நாய்களை வைத்து வேட்டையாடிய5 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

வனப்பகுதிக்குள்  நாய்களை வைத்து விலங்குகளை வேட்டையாடியவர்கள் கைது
X

வனப்பகுதிக்குள் நாய்களை வைத்து விலங்குகளை வேட்டையாடியவர்கள்

கன்னியாகுமரி மாவட்ட வன உயிரின சரணாலயம் பூதப்பாண்டி வனச்சரகம் தெற்குமலை மேற்கு பீட் பகுதியில் சில நபர்கள் நாய்களுடன் சென்று விலங்குகள் வேட்டையில் ஈடுபடுவதாக வனதுறைக்கு தகவல் கிடைத்தது.

தகவல் அடிப்படையில் சம்பவ இடம் சென்ற வன காவலர்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் தெற்குமலை மேற்கு பீட் பகுதியின் தொலைவில் தடை செய்யப்பட்ட பகுதியில் 5 நபரால் வேட்டை நாயுடன் வலம் வருவதை கண்ட வன காவலர்கள் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் இராமனாதிச்சன்புதூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் வேட்டை நாயை வைத்து விலங்குகளை வேட்டையாட முயற்சித்ததும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து வேட்டையாட முயற்சி செய்த நாய் மற்றும் ஐந்து நபர்களை வன காவலர்கள் கைது செய்தனர். மேலும் ஐந்து நபர்களுக்கும் ரூ.2000 வீதம் மொத்தம் ரூ.10000/- அபராத கட்டணமாக பெறப்பட்டது.

இது போன்று இனி வரும் காலங்களில் வேட்டையாட செல்லக்கூடாது என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்த வனகாவலர்கள் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விடுவித்தனர்.

Updated On: 5 Jun 2021 12:44 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த நண்பர் பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    என்ன செய்ய போகிறார், செந்தில் பாலாஜி?
  3. அரசியல்
    “அ.தி.மு.க முகாமில் என்ன நடக்கிறது?”
  4. பூந்தமல்லி
    இளம்பெண் சாவில் மர்மம் : காவல் நிலைய வாயிலில் உறவினர்கள் தர்ணா..!
  5. தேனி
    கைவிட்ட தனியார் நிறுவனம் : பாஜவில் ஒரே புலம்பல்..!
  6. நாமக்கல்
    மேட்டூர் அணையை உடனடியாக தூர்வார கொங்கு ஈஸ்வரன் கோரிக்கை
  7. தேனி
    தேனி மாவட்ட சதுரங்க போட்டி வெற்றி பெற்றவர்கள் விவரம்..!
  8. காஞ்சிபுரம்
    விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. உலகம்
    95 ஆண்டுகளாக குழந்தையே பிறக்காத நாடு - அதிசயமான உண்மை! - காரணம்...
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்