/* */

குமரியில் ஆட்சியர் அலுவலகத்தில் போலீசாருடன் மல்லு கட்டிய மூதாட்டி

குமரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீசாருடன் மல்லு கட்டிய மனநலம் பாதித்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

குமரியில் ஆட்சியர் அலுவலகத்தில் போலீசாருடன் மல்லு கட்டிய மூதாட்டி
X

குமரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீசாருடன் மல்லு கட்டிய மனநலம் பாதித்த மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குருந்தங்கோடு பகுதியை சேர்ந்தவர் மேரி சேவியர். மூதாட்டியான இவர் இன்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார்.

அப்போது அவரின் நடவடிக்கைகளை கண்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மூதாட்டியை தடுத்து நிறுத்தி அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது எங்கள் ஊரில் போக்குவரத்திற்காக நான் ஒரு மிகப்பெரிய பாலம் கட்டி உள்ளதாகவும் இதனால் பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் என்னிடம் சண்டைக்கு வருகிறார்கள் என கூறினார்.

மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என கூறினார். இதனால் மூதாட்டி மனநலம் பாதித்தவர் என்பதை அறிந்து சுதாரித்து கொண்ட போலீசார் அவரை முன்னேறி செல்ல விடாமல் தடுத்தனர்.

இதனை தொடர்ந்து தன்னை தடுக்க கூடாது என போலீசாரிடம் மல்லு கட்டிய மூதாட்டி நீண்ட நேரமாக அங்கு நின்று விட்டு போலீசாரை திட்டியவாறே வெளியேறினார். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 24 Feb 2022 2:29 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. வணிகம்
    ஓய்வுக்காலத்தில் நிம்மதியாக வாழ வேண்டுமா? அடடே ஐடியா!
  3. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  4. திருவண்ணாமலை
    மண் பரிசோதனை செய்து தேவையான உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  6. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  7. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  8. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  9. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  10. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்