/* */

என் வீட்டில் கூட என்னை தேட மாட்டார்கள், எடப்பாடி பழனிச்சாமி தேடுகிறார் - உதயநிதி ஸ்டாலின்

என் வீட்டில் கூட என்னைத் தேட மாட்டார்கள், அந்த அளவிற்கு எடப்பாடி கே.பழனிச்சாமி என்னை தேடுகிறார் -உதயநிதி ஸ்டாலின்

HIGHLIGHTS

என் வீட்டில் கூட என்னை தேட மாட்டார்கள், எடப்பாடி பழனிச்சாமி தேடுகிறார் - உதயநிதி ஸ்டாலின்
X

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞர் அணி மாநில செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது மக்கள் மத்தியில் பேசிய அவர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முதலில் முதல்வர் ஸ்டாலினை பற்றி பேசி வந்தார். இப்போது தலைவரை விட்டு விட்டு கடந்த இரண்டு நாட்களாக என்னை பற்றி பேசி வருகிறார்.

பொய் வாக்குறுதி கொடுத்துவிட்டு போய்விட்டார் என என்னை தேடிக்கொண்டு இருக்கிறார், என்னை வீட்டில் கூட தேடமாட்டார்கள், ஆனால் எடப்பாடி பழனிசாமி தேடி வருகிறார். கடந்த பல நாட்களாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறேன், அது தெரியாமல் என்னை தேடி வருகிறார்.

ராகுல் காந்தி ஐந்து நாட்களுக்கு முன்பு பாராளுமன்றத்தில் மோடியை பார்த்து சவால் விட்டார், தமிழகத்தில் திமுக இருக்கும்வரை பா.ஜ.கவால் கால் வைக்க முடியாது என்று சவால்விட்டதோடு, தமிழகத்தை பார்த்தாவது திருந்த வேண்டும் என கூறியிருக்கிறார்.

பா.ஜ.க விற்கும், அ.தி.மு.க விற்கும் சிம்ம சொப்பனமாக தலைவர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார். மாநில உரிமை பறிக்கப்படும்போது எல்லாம் நம் முதல்வர்தான் குரல் கொடுத்து வருகிறார். அ.தி.மு.க ஆட்சியில் கடந்த பத்தாண்டுகளாக நாகர்கோவில் புறக்கணிக்கப்படுள்ளது, நாங்கள் 8 மாதங்களில் சாலைகளை சீரமைக்க 26 கோடி ஒதுக்கி உள்ளோம் என பேசினார்.

Updated On: 15 Feb 2022 12:21 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  2. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  3. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  4. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  5. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  6. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  7. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  8. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  9. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...
  10. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...