/* */

நாகர்கோவில் மழை நீர் தேங்கிய இடங்களை ஆய்வு செய்த மேயர்

நாகர்கோவிலில், மழை நீர் தேங்கிய இடங்களை ஆய்வு செய்த மேயரின் உத்தரவால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.

HIGHLIGHTS

நாகர்கோவில் மழை நீர் தேங்கிய இடங்களை ஆய்வு செய்த மேயர்
X
மழை பாதிப்புகளை ஆய்வு செய்த நாகர்கோவில் மேயர். 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பெய்த கனமழை காரணமாக வாத்தியார்விளை சந்திப்பு, ஜஸ்டஸ் தெரு, வெட்டூர்ணிமடம் திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட மாநகரின் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. ஏற்கனவே மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் களமுனையில் அப்பகுதியில் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்களுக்கும் வாகன ஒட்டிகளும் ஆபத்து ஏற்படும் நிலை உருவானது.

மாநகர பகுதிகளில், மழை வெள்ளம் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சி அளித்த இடங்களை மாநகராட்சி மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு உடனடியாக நீர் வெளியேற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து, போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றும் பணியை, மாநகராட்சி அதிகாரிகளும் ஊழியர்களும் மேற்கொண்டனர். இனி எப்போது மழை பெய்தாலும் மாநகரப் பகுதிகளில் மழைநீர் தேங்காத அளவில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி மேயர் தெரிவித்தார்.

Updated On: 13 April 2022 12:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!