/* */

நாகர்கோவில் மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க எம்.பி காேரிக்கை

பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் நாகர்கோவில் மாநகராட்சி சாலைகளை சீரமைக்க எம்பி விஜய்வசந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க எம்.பி காேரிக்கை
X

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் அவர்களை எம்பி விஜய் வசந்த் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்டு பணிகள் முடிவு பெற்ற சாலைகள் உட்பட அனைத்து சாலைகளும் மிகவும் மோசமாக உள்ளது.

இதனால் பெரும் விபத்துக்கள், ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர், மேலும் வாகனங்களை இயக்க முடியாத அளவிற்கு சாலைகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் பழுதான சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி இன்று மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித் அவர்களை சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

அப்போது பழுதான சாலைகளை போர்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 10 ஆண்டுகளாக முடிவு பெறாமல் நடைபெற்று வர் பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

Updated On: 10 Nov 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு