/* */

குமரியில் 1 லட்சம் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வருகை: கலெக்டர் தகவல்

குமரியில் 1 லட்சம் மாணவர்கள் பள்ளி கல்லூரிகளுக்கு நேரடியாக வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்.

HIGHLIGHTS

குமரியில் 1 லட்சம் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு நேரடி வருகை: கலெக்டர் தகவல்
X

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து கலெக்டர் அரவிந்த் ஆய்வு மேற்காெண்டார்.

கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து தமிழகம் முழுவதும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் கல்லூரிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டன, கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை 493 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டு மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டது.

இதனிடையே அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கண்ட மாவட்ட ஆட்சியர் அரவிந்த் செய்தியாளர்களிடம் கூறும்போது, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் ஒரு லட்சம் மாணவர்கள் நேரடியாக பள்ளி, கல்லூரிகளுக்கு வந்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

Updated On: 1 Sep 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  3. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  5. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  6. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  7. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  8. சோழவந்தான்
    மதுரை அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு காளைக்கு பிறந்த நாள் விழா
  9. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்