/* */

அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய தடை , குமரி ஆட்சியர் உத்தரவு

குமரி கடற்கரைகள் மற்றும் ஆற்று படுகைகளில் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்ய தடை , குமரி ஆட்சியர் உத்தரவு
X

கன்னியாகுமரி கலெக்டர் (பைல் படம்)

முக்கடல் சங்கமிக்கும் புனித இடமான கன்னியாகுமரி கடலில் அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் அவர்கள் ஆத்மா சாந்தி அடைவதோடு முன்னோர்கள் ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அதன்படி தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசை தினங்களில் தமிழகம் மட்டும் அல்லாது பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கன்னியாகுமரி கடல் மற்றும் குழித்துறை ஆற்று படுகையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

இந்நிலையில் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரிப்பை தொடர்ந்து தடுப்பு நடவடிக்கையாக ஆடி அமாவாசை நாளில் கன்னியாகுமரி உள்ளிட்ட கடற்கரைப்பகுதிகளிலும் மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்று படுகைகளிலும் தர்ப்பணம் செய்யவும், பொதுமக்கள் கூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த தடை உத்தரவை பிறப்பித்த மாவட்ட ஆட்சியர் அரவிந்த் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க கேட்டுக்கொண்டார்.

Updated On: 1 Aug 2021 4:24 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைத்து உண்பதின் அவசியம் என்ன..?...
  2. லைஃப்ஸ்டைல்
    10 ஆண்டு திருமண நாள் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    காதல் கிளியே காதல் கிளியே, உன்னை நான் காதலிக்கலையே...! - மறைமுக...
  4. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
  5. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  6. திருவள்ளூர்
    ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்
  7. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  8. பொள்ளாச்சி
    ஆனைமலை ஆற்றில் கலக்கும் கழிவு நீருடன் மனு கொடுக்க வந்த சமூக ஆர்வலர்
  9. குமாரபாளையம்
    மதுக்கடை பார் ஊழியரை தாக்கியதாக அ.தி.மு.க. நகர செயலாளர் மீது புகார்
  10. ஈரோடு
    காலிங்கராயன்பாளையம் அனைத்து வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்