/* */

குமரியின் குற்றாலத்தில் வெள்ள பெருக்கு - பொதுமக்கள் வெளியேற்றம்

குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு நீர் வீழ்ச்சியில், வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர்.

HIGHLIGHTS

கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி விடிய விடிய கொட்டித் தீர்த்த கன மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாவட்டத்தின் மலையோர பகுதிகளிலும் கனமழை தொடர்ந்து நீடித்து வருவதால் மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு 1, சிற்றாறு 2 உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து பெருமளவில் அதிகரித்துள்ளது.

மேலும், 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் தற்போது 46 அடியை எட்டி உள்ள நிலையில், அணைக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கின்றது. இதனை தொடர்ந்து 3 ஆயிரம் கன அடி நீர் உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது, இதன் காரணமாக பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

மேலும் குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு நீர்வீழ்ச்சியில் தடுப்பு வேலியை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றின் கரையோரம் மற்றும் திற்பரப்பு அருவி நீர் வெளியேறும் பகுதியில் உள்ள, கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான பகுதிக்கு உடனடியாக செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

Updated On: 28 Sep 2021 7:48 AM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  2. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  3. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!
  4. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  5. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  6. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  7. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணையில் நீர்வரத்து 92 கன அடியாக சரிவு
  8. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?