Begin typing your search above and press return to search.
இளம்பெண்ணை துன்புறுத்தி கணவருக்கு கொலை மிரட்டல் - வாலிபர் கைது
குமரியில், இளம்பெண்ணை துன்புறுத்தியதோடு அவரின் கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே எம்.கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரீதா குமாரி. இவரது மகளை, தனது வேனில் தினந்தோறும் பள்ளிக்கு அனுப்புமாறு, வல்லன்குமாரவிளை பகுதியைச் சேர்ந்த சாம்சன் பாபு என்பவர் கேட்டுள்ளார்.
அதற்கு பிரீதா குமாரி மறுத்த நிலையில், இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில், ப்ரீதா குமாரி தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் போது வழிமறித்த சாம்சன் பாபு, ப்ரீதா குமாரியின் சேலையை பிடித்து இழுத்து துன்புறுத்தியுள்ளார்.
அதை தட்டிக் கேட்ட அவரது கணவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பிரீதா குமாரி சுசீந்திரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், சாம்சன் பாபு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.