Begin typing your search above and press return to search.
தடை செய்த புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
நாகர்கோவிலில் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்களை விற்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டார் போலீசார் இன்று பீச் ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பட்டகசாலியன்விளை பகுதியில் ராஜலிங்கம் என்பவர் நடத்தி வந்த கடையில் சோதனை நடத்தினர். சோதனையில் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து ராஜலிங்கத்தை போலீசார் கைது செய்தனர். மேலும் போதை புகையிலை பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டது.