Begin typing your search above and press return to search.
வட்டி செலுத்தாத கூலித்தொழிலாளிக்கு கொலை மிரட்டல்...
கந்துவட்டி
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தேரேகால்புதூர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முருகன். இவர் புதூர் காலனியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் ஒரு லட்ச ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
முருகன் மாதந்தோறும் வட்டி செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் முருகன் வட்டி கொடுக்கவில்லை என்று ஆத்திரம் அடைந்த மணிகண்டன் உள்பட 4 பேர் சேர்ந்து முருகனிடம் தகாத வார்த்தைகள் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் அடிப்படையில் மணிகண்டன் உள்பட 4 பேர் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணிகண்டன் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது