/* */

குமரியில் மனு கொடுக்க வந்த முதியவர்கள்: தேடி வந்து மனு பெற்று எஸ்பி

மனு கொடுக்க வந்த முதியவர்களை தேடி சென்று மனு வாங்கிய குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.

HIGHLIGHTS

குமரியில் மனு கொடுக்க வந்த முதியவர்கள்: தேடி வந்து மனு பெற்று எஸ்பி
X

குமரியில் மனு காெடுக்க வந்த முதியவர்களை அவர்களது இடத்திற்கே தேடி சென்று மனு வாங்கிய எஸ்பி.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் பொது மக்களின் பிரச்சனைகள் குறித்த மனுக்களை நாள்தோறும் பெற்று அது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்து வருகிறார். இன்று வழக்கம் போல் பொது மக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்த மனுக்களை அளிக்க வந்திருந்தனர்.

அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து முதியவர்கள் பலர் மனுவினை அளிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இதனை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் முதியவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று மனுவினை வாங்கி மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மேலும் மாவட்ட காவல் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் 04652 220167 என்ற தொலைபேசி எண்ணை மூத்த குடிமக்கள் தொடர்புகொண்டு அவர்கள் புகார் அளிக்கலாம். புகார் தொடர்பான விவரங்களை தெரிவித்தவுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் அவரது வீடுகளுக்கே நேரடியாகச் சென்று போலீசார் புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள். மனு அளிப்பதற்காக முதியவர்கள் நீண்ட தூர பயணம் மேற்கொண்டு தனது அலுவலகம் வர தேவையில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் தெரிவித்து உள்ளார்.

Updated On: 27 April 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னவளுடனான பயணம் தொடர்கிறது..!
  2. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  3. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  4. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  6. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  7. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  8. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்