/* */

குமரியில் கவிமணி 67 வது நினைவு நாள்: ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை

கவிமணியின் 67 ஆவது நினைவு நாளை முன்னிட்டு குமரியில் அரசு சார்பில் ஆட்சியர் மரியாதை செலுத்தினார்.

HIGHLIGHTS

குமரியில் கவிமணி 67 வது நினைவு நாள்: ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
X

சுசீந்திரத்தில் அமைந்துள்ள கவிமணி திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே தேரூர் கிராமத்தில் கடந்த 1857 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 27 ஆம் தேதி பிறந்தவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.

நாகர்கோவிலில் உள்ள அரசு பள்ளியில் தமிழ் ஆசிரியராக தனது வாழ்க்கையை தொடங்கிய கவிமணியின் புகழை பறைசாற்றும் வகையில் அப்பள்ளிக்கு கவிமணி பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

தமிழ் மீது மிகுந்த ஆர்வமும் பற்றும் கொண்டிருந்த அவர் பல்வேறு கவிதைகளை இயக்கியுள்ளார், குழந்தைகளுக்காக சிறப்பு கவிதைகள், பாடல்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட கவிதைகளையும் இயற்றியுள்ளார்.

இவரது கைவீசம்மா கைவீசு குழந்தை பாடல் இன்றளவும் பாடப்பட்டு வரும் நிலையில் இத்தகைய சிறப்புகளை பெற்ற கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை கடந்த 1954 செப்டம்பர் 26ம் தேதி இயற்கை எய்தினார்.

அவரது 67வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்ட நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, தமிழக அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Updated On: 26 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. திருவள்ளூர்
    அதிகளவு மண் எடுப்பதாக ஹிட்டாச்சி எந்திரங்களை சிறை பிடித்து கிராம...
  4. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 118 கன அடியாக அதிகரிப்பு!
  5. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  6. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  7. ஈரோடு
    பவானி சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி...
  8. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  9. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  10. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்