Begin typing your search above and press return to search.
கன்னியாக்குமரி அருகே பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலி
கன்னியாக்குமரி அருகே பைக்குகள் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.
HIGHLIGHTS
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் வில்சன்(22). பாலிடெக்னிக் முடித்துவிட்டு கட்டிட தொழிலுக்கு சென்று வந்தார். இந்நிலையில் இன்று இவர் கன்னியாகுமரியிலிருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டு இருந்தார். பொற்றையடி பகுதியில் சென்றபோது ரோட்டை கடக்க முயன்ற மற்றொரு பைக் மீது இவர் எதிர்பாராதவிதமாக மோதினார். இதில் தூக்கி வீசப்பட்டு ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டிருந்த வில்சனை அருகில் இந்தவர்கள் ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த தென்தாமரைகுளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.