/* */

22 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் கொழுப்பு பறிமுதல், 4 பேர் கைது

மாங்காடு பகுதியில் ரூபாய் 22 கோடி மதிப்பிலான திமிங்கலத்தின் கொழுப்பை இணையத்தில் விற்பனை செய்ய முயன்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்

HIGHLIGHTS

22 கோடி ரூபாய் மதிப்பிலான திமிங்கலத்தின் கொழுப்பு பறிமுதல், 4 பேர் கைது
X

22 கோடி மதிப்புள்ள திமிங்கிலத்தின் கொழுப்பை ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மருந்து பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் தயாரிக்க மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் திமிங்கலத்தின் கொழுப்பினை சிலர் மாங்காடு பகுதியில் பதுக்கி ஆன்லைன் (இணையத்தின்) மூலம் விற்பனை செய்யப்படுவதாக மத்திய புலனாய்வு துறை மற்றும் வனஉயிர் பாதுகாப்பு பிரிவு போலீஸார்க்கு தவகல் கிடைத்துள்ளது.

இதையடுத்து திமிங்கலத்தின் கொழுப்பை வாங்கும் இடைத்தரகர்கள் போல் வேடமணிந்த மத்திய புலனாய்வு துறை மற்றும் வன உயிர் பாதுகாப்பு பிரிவு போலீஸார் மாங்காடு பகுதியில் குறிப்பிட்ட வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது அந்த வீட்டில், 22 கிலோ எடையுள்ள திமிங்கலத்தின் கொழுப்பினை பதுக்கி வைத்துள்ளது தெரியவந்தது. இதனையடுத்து மதுரையைச் சேர்ந்த முருகன் (53), சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (30), ரஞ்சித் (36), விஜயபாஸ்கர் 56 ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ 22 கோடி மதிப்புள்ள திமிங்கலத்தின் கொழுப்பினை பறிமுதல் செய்து ஸ்ரீபெரும்புதூர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஸ்ரீபெரும்புதூர் வனத்துறையினர், திமிகலத்தின் கொழுப்புகள் வைத்திருந்த முருகன், கிருஷ்ணமூர்த்தி, ரஞ்சித், விசயபாஸ்கர் ஆகியோரை ஸ்ரீபெரும்புதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Updated On: 21 Aug 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    சென்னை உயர்நீதிமன்றத்துக்கு ஜூன் 2-ம் தேதி வரை கோடை விடுமுறை
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் மாநகராட்சி மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்களால்...
  3. திருப்பூர்
    வெயில் நேரத்தில் வெளியே போகாதீங்க; திருப்பூர் கலெக்டர் அட்வைஸ்!
  4. கீழ்பெண்ணாத்தூர்‎
    தண்ணீர் பந்தலை திறந்து வைத்த துணை சபாநாயகர்
  5. கலசப்பாக்கம்
    மிருகண்டா அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
  6. ஆன்மீகம்
    குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்
  7. திருவண்ணாமலை
    தபால் வாக்கு சீட்டுகளை பாதுகாப்பாக கையாள ஆட்சியர் அறிவுரை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு பயண கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே
  9. திருவண்ணாமலை
    கோடை வெப்பத்தை தணிக்க அருணாச்சலேஸ்வரர் கோயிலில் ஏற்பாடு
  10. செங்கம்
    சுட்டெரிக்கும் வெயில்: சாத்தனூர் அணையில் சுற்றுலா பயணிகள் வருகை