/* */

வாக்கு எண்ணிக்கை மைய பணியில் ஈடுபட இருந்த 56 பேருக்கு கொரோனா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மைய பணியில் ஈடுபட இருந்தவர்களில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வாக்கு எண்ணிக்கை மைய பணியில் ஈடுபட இருந்த 56 பேருக்கு கொரோனா
X

கொரோனா பரிசோதனை நடைபெற்ற காட்சி.

2021ம் ஆண்டுக்காக தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 6ம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் நாளை அந்தந்த மாவட்ட வாக்குப்பதிவு எண்ணிக்கை மையங்களில் காலை 8 மணி முதல் துவங்க உள்ளது.

இதில் பணிபுரிய உள்ள அரசு அலுவலர்கள், வேட்பாளர்களின் முகவர்கள், பத்திரிகையாளர்கள் என அனைத்து தரப்பினரையும் சுகாதாரத்துறையினர் மூலமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டு அதன் முடிவு சான்றிதழை காண்பித்த பிறகே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக தெரிவித்தது.

அந்தவகையில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற இரண்டு நாள் சிறப்பு முகாமில் 2062 பேர் பரிசோதனை மேற்கொண்டனர். அதில் 56 பேருக்கு நேர்மறை ( பாஸிடிவ்) முடிவுகள் வந்துள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எடுக்கப்பட்ட முகாமில் 20 பேருக்கும் , காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் எடுக்கப்பட்டத்தில் 6 பேருக்கும், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியில் எடுக்கப்பட்டதில் 12 பேருக்கும், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் எடுக்கப்பட்டவர்களில் 8 பேருக்கும், ஆலந்தூர் தொகுதியில் எடுக்கப்பட்டதில் 10 பேருக்கும் என 56 நபர்களுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர்.

Updated On: 1 May 2021 5:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!