Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
HIGHLIGHTS
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறிகள் கட்டுமான பொருட்கள் விலை ஏற்றம் கண்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என அக்கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
அவ்வகையில் காஞ்சிபுரத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் அடுப்பு மூட்டி மாவட்ட தலைவர் அளவூர்நாகராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் சைக்கிள் உடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
இதில் நிலையற்ற நிலையில் உள்ள பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி மத்திய அரசிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.