/* */

உரிய ஆவணங்கள் இன்றி பைக் வாங்க வந்தவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் பறிமுதல்

காஞ்சிபுரம் வேலூர் சாலையில் வாகன சோதனையில் பறக்கும் படை ஈடுபட்டிருந்தபோது வாலிபர் இடமிருந்து ரூபாய் 2 லட்சம் ரூபாய் ஆவணங்கள் இல்லை என பறிமுதல் செய்யப்பட்டது

HIGHLIGHTS

உரிய ஆவணங்கள் இன்றி பைக் வாங்க வந்தவரிடமிருந்து 2 லட்சம் ரூபாய் பறிமுதல்
X

உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துவரப்பட்ட ரூபாய் 2 லட்சத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து கோட்டாட்சியர் கலைவாணியிடம் ஒப்படைத்தபோது.

காஞ்சிபுரம் அடுத்த பொன்னியம்மன் பட்டறை அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியாக வந்த (Swift) காரை சோதனை செய்த போது இருசக்கர வாகனம் வாங்க உரிய ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் வழங்குவதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் அடுத்த பொன்னியம்மன்பட்டறை அருகே துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனுசியா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்தை சேர்ந்த கமல் நாதன் என்பவர் காரை நிறுத்தி சோதனை செய்ததில் இரண்டு லட்ச ரூபாய் இருப்பதை கண்டு பணம் குறித்து விசாரித்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போது , இருசக்கர வாகனம் வாங்குவதற்காக 2 லட்சம் ரூபாய் எடுத்து வந்ததாக கூறிய நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாததால் இரண்டு லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இரண்டு லட்ச ரூபாயை காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியரும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலருமான கலைவாணியிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.

தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் இதுவரை ஐந்து நபர்கள் இடம் இருந்து மட்டுமே மாவட்டம் முழுவதும் பறக்கும் படையின்களால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On: 28 March 2024 2:15 PM GMT

Related News

Latest News

  1. அரியலூர்
    ஜெயங்கொண்டம் அருகே கொள்ளிடம் ஆற்றில் திரியும் முதலையால் பீதி
  2. லைஃப்ஸ்டைல்
    மந்திரப் புன்னகை, அது மகனின் புன்னகை! இதயத்தை நிறைக்கும் இனிமை
  3. க்ரைம்
    திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அருகே கோவில் காவலாளி அடித்துக் கொலை
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  5. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  6. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  7. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  8. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  9. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  10. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...