/* */

காஞ்சிபுரம் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு முக்கிய குற்றவாளி கைது

காஞ்சிபுரம் மாநகரின் குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பு முக்கிய குற்றவாளி கைது
X

தலை மறைவு குற்றவாளி விக்கி ( கை உடைந்திரும்பவர்) , அவருடன் இருந்த மணிகண்டன் (வலது மேல்), வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாநகரின் குடியிருப்பு பகுதியில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டார். ஏற்கனவே இவ்வழக்கில் ஐந்து பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்துவந்த முக்கிய குற்றவாளி தற்போது தடுக்கி விழுந்து கையில் மாவுகட்டு போடப்பட்டு உடனிருந்த கஞ்சா சப்ளையர்ஸ் இருவர் கைது சிறையில் அடைக்கப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கஞ்சா விற்பனை தலைவிரித்தாடி எளிதாக கிடைக்கும் பொருளாக மாறி இருந்து வந்தது. இந்த நிலையில் இதனை கட்டுபட்டுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் இதற்கென தனிப்படை அமைத்து தற்போது தீவிரமாக மாவட்ட முழுவதும் கண்காணிக்கப்படுகிறது.

அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட‌ மாண்டூகணீஸ்வரர் கோவில் தெரு பகுதியில் ஒரு வீட்டில் சிலர் வாடிக்கை எடுத்து தங்கியிருந்து கஞ்சா விற்பனை செய்வதாக அந்த தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவ்வப்போது அவ்வீட்டிற்கு சென்றுவந்த காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்துவந்த சிவசங்கரன்‌ என்பவனை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவ்வீட்டில் சிலர் தங்கியிருப்பது தெரியவந்த நிலையில், தீடிரென போலீசார் அவ்வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு நாட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வைத்திருந்ததும், தயாரிக்க பயன்படுத்தி ஆணி, பால்ஸ் போன்ற மூலப்பொருட்களும் கத்தி உள்ளிட்ட பொருட்களும் இருப்பது தெரியவந்தது.

இதனையெடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். இதில் தொடர்புடைய சென்னை வியாசர்பாடியை சேர்ந்த புகழேந்தி, அவனது நண்பர்களான திருத்தணியை சேர்ந்த ஜெயகுமார்,சோமேஸ்,லோகேஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் தனது எதிரியாக இருந்துவந்த ஆர்.கே என்பவரை கொல்ல சதிதிட்டம் தீட்டிய அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான விக்கி(எ) பரிவட்டம் விக்கி தலைமறைவாக இருந்துவந்த நிலையில் போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தாயார்குளம் அருகே கஞ்சா விற்பனையாளர்கள் மணிகண்டன், வசந்த்குமார் ஆகியோருடன் விக்கி உள்ளதாக தகவல் வந்த நிலையில் போலீசார் இருவரையும் பிடித்துவிட விக்கி தப்பியோடிய போது தவறி விழுந்து நிலையில் போலீசாரிடம் பிடிபட்டார்.

இதனையெடுத்து அவனுக்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து மாவு கட்டு போட்டுப்பட்டு இன்னும் சற்றும் நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மூவரும் சிறையில் அடைக்கபட்டனர்.

இவ்வுலகில் முக்கிய குற்றவாளி விக்கி கைது செய்யப்பட்டுள்ளது இவ்வழக்கு நிறைவு பெற்றுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 24 Jan 2023 2:15 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  2. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  3. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  4. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  5. தொழில்நுட்பம்
    எச்.எம்.டி பல்ஸ்: சுயமாக சரிசெய்யும் ஸ்மார்ட்போன்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  7. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  8. ஈரோடு
    கோபிசெட்டிபாளையத்தில் அதிமுக சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு விழா
  9. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  10. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...