/* */

ஸ்ரீபெரும்புதூர் : ஆட்டோவில் கஞ்சா கடத்தல், 3 பேர் கைது, ஆட்டோ பறிமுதல்

சென்னைக்கு கஞ்சா கடந்த முயன்றவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 1.5 கிலோ கஞ்சா மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் : ஆட்டோவில் கஞ்சா கடத்தல், 3 பேர் கைது, ஆட்டோ பறிமுதல்
X

கஞ்சா கடத்தியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள்

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.M.சுதாகர் கள்ளத்தனமாக கஞ்சா, குட்கா போன்ற போதை வஸ்துகளை மாவட்டத்தில் விற்பனை செய்வர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

மேலும் மாவட்ட எல்லைகள் மற்றும் முக்கிய சாலைகளில் வாகன சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நேற்று மாலை சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வரதராஜபுரம் 400 அடி பைபாஸ் சாலையில் அமைக்கப்பட்ட காவல் சோதனை சாவடியில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது சந்தேகமான முறையில் சென்னை மார்கமாக சென்ற ஆட்டோவினை நிறுத்தி சோதனை செய்தபோது பெருங்களத்தூரை சேர்ந்த ஜான் லுக் மகி , கபிலன் , மோகன்குமார் ஆகியோர் முன்னுக்கு முரணாக பேசினர்.

இதில் சந்தேகம் அடைந்து போலீசார் ஆட்டோவை சோதனை மேற்கொண்டனர். அப்போது சுமார் 1.5 கிலோ கஞ்சா சிக்கியது. மேற்படி நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

Updated On: 13 Aug 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  4. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  6. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  7. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  8. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  9. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  10. வீடியோ
    🔴LIVE : மீண்டும் அயோத்தியில் பாரத பிரமர் மோடி || PM Modi performs...