Begin typing your search above and press return to search.
காஞ்சிபுரத்தில் 4 மணி நேரமாக கனமழை: சாலைகளில் வெள்ளம்
காஞ்சிபுரத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் நீர்த்தேங்கியுள்ளது.
HIGHLIGHTS
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக வரும் இரு நாட்கள் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதன் பின்னர், காலை 9 மணி முதல், மழை மெல்ல மெல்ல பெய்யத் துவங்கியது. மழை, ஒரு மணி வரை தொடர்ந்து 4 மணி நேரம் கனமழை பெய்தது.
இதனால், காஞ்சிபுரத்தின் தாழ்வான பகுதிகள் என ஓரிக்கை, செவிலிமேடு , தாண்டவராய நகர் , முல்லை நகர் , மின்நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் , நகர சாலைகளிலும் நீர் தேக்கம் ஏற்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் பெருத்த சிரமம் சந்தித்தனர். அரசு மற்றும் தனியார் பணிக்கு சென்ற ஊழியர்கள் சிரமத்துடன் அலுவலகம் சென்றனர்.