காஞ்சிபுரம்: தண்ணீர் பந்தல் திமுக எம்எல்ஏ க.சுந்தர் திறப்பு
கடும் கோடைகாலம் பொதுமக்கள் , வாகன ஓட்டிகள் தண்ணீர் பந்தலால் சிறுது ஓய்வு மற்றும் தாகம் தீர்க்கபடுகிறது.
HIGHLIGHTS
கோடை காலம் துவங்க இன்னும் சில வாரங்கள் உள்ள நிலையிலேயே கடந்த திங்கட்கிழமை முதல் பல்வேறு மாவட்டங்களில் 95 டிகிரி கடும் வெப்பம் பொதுமக்கள் முதியோர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஏற்படுத்தி வருகிறது. தற்போது சாலை விரிவாக்கம் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மரங்கள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வாகன ஓட்டிகள் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தாகம் ஏற்படும் நிலையில் நீருக்காக தவிர்பதை குறைக்க அனைத்து சாலையோர பகுதிகளில் நிர்வாகிகள் தண்ணீர் பந்தல் திறப்பு திமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அவ்வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 49 வந்து வார்டு மாமன்ற உறுப்பினர் பூங்கொடி தசரதன் ஏற்பாட்டின் பேரில் சத்யா நகர் பகுதியில் அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை எம்.பி. ஜி.செல்வம் , உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் மற்றும் மாநகராட்சி மேயர் மாகலட்சுமியுவராஜ் திறந்து வைத்து வாகன ஓட்டிகள் , பொதுமக்களுக்கு மோர், கிரேப்ஜீஸ், தர்பூசணி, கிரணிபழம், வெள்ளரிகாய் ஆகியவைகளை வழங்கினர்.
இது பொதுமக்களுக்கு வெப்பத்தை தணிக்கும் பொருட்கள் வழங்ககியதால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சியுற்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் யுவராஜ் , திமுக ஒன்றிய பொருளாளர் தசரதன், மாமன்ற உறுப்பினர் சங்கர், திமுக நிர்வாகிகள் மலர்மன்னன், நாத்திகம் நாகராஜன், கமல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.