/* */

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆர்த்தி ஆலோசனை

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கவுள்ள நிலையில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் ஆலோசனை

HIGHLIGHTS

பள்ளிகள் திறப்பு முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் ஆர்த்தி ஆலோசனை
X

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் நடப்பு கல்வியாண்டுக்கான பாடங்களை படித்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் 9 முதல் 12ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பள்ளிகள் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் திறக்க வாய்ப்புள்ளதாக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பதற்கான முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில் கடந்த பல மாதங்களாக பள்ளி வகுப்பறைகள் மூடப்பட்டு இருந்ததால் அதை முழுவதும் சுத்தம் செய்வது , கிருமிநாசினிகள் தெளிப்பது, பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்துதல், அரசு பரவல் தடுப்பு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றுதல் உள்ளிட்டவை குறித்து ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் கூறப்பட்ட அறிவுரைகளை அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோருடன் இணைந்து செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டது. பள்ளிகளில் சுற்றுச்சுவர்களில் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள் எழுதவும் அறிவுறுத்தப்பட்டது.

Updated On: 13 Aug 2021 8:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை நினைத்து ஏங்கும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. மயிலாடுதுறை
    ஏவிசி கல்லூரியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா..!
  3. நாமக்கல்
    பரமத்தி மலர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில்
  4. வீடியோ
    Road- ட கூறுபோட்ட நாட்டையும் கூறுபோட்டு வித்துடுவ !#seeman...
  5. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  6. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  8. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  9. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  10. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....