/* */

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்கியது

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ஆயிரத்து 112 மாணவர்களும், 7 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு துவங்கியது
X

பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெறும் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பறக்கும் படையினர் ஆய்வு செய்தபோது எடுத்த படம். 

தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் அரசு தேர்வுகள் இன்று முதல் தொடங்கியுள்ளது. முதலாவதாக பிளஸ் டூ அரசு தேர்வு நேற்று காலை 10 மணிக்கு துவங்கியது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13 ஆயிரத்து 518 மாணவ, மாணவிகள் 50 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். அதனைத் தொடர்ந்து இன்று பத்தாம் வகுப்பு அரசு தேர்வுகள் தொடங்குகின்றன. நாளை தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறுகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 8ஆயிரத்து 112 மாணவர்களும், 7 ஆயிரத்து 752 மாணவிகளும் என மொத்தம் 15 ஆயிரத்து 264 பேர் தேர்வு எழுத உள்ளனர்.மாணவர்கள் தேர்வு எழுத வசதியாக 61 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

61 தேர்வு மையங்களுங்கும் ஒரு முதன்மை கண்காணிப்பாளர் பணியில் இருப்பார். இதைத் தவிர 61 துறை அலுவலர்களும் இவர்களுக்கு உறுதுணையாக தேர்வுப் பணிகளை கவனிப்பர். மாணவர்கள் தேர்வுகளில் முறைகேடாக ஈடுபட வேண்டாம் என பள்ளிக் கல்வித்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

முறைகேடுகளை கண்காணிக்க 80 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர் கழிவறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையில்லா மின்சாரம் வழங்க மின்சாரத் துறைக்கு பள்ளிக்கல்வித் துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Updated On: 6 May 2022 4:45 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  2. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  3. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  5. லைஃப்ஸ்டைல்
    யூரிக் அமிலம் உங்களை வாட்டி வதைக்கிறதா? சர்க்கரை நோயிலிருந்து...
  6. கோவை மாநகர்
    சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு: குடிநீர் தட்டுப்பாடு அபாயம்
  7. விளையாட்டு
    திருச்சி துப்பாக்கி சுடும் போட்டியில் 2 பதக்கம் வென்ற ஐஜி...
  8. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  10. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு