Begin typing your search above and press return to search.
கள்ளக்குறிச்சி: முகாமில் தடுப்பூசி செலுத்தியவர்கள் 36,648 பேர்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்றைய முகாமில் 36,648 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
HIGHLIGHTS
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 455 மையங்களில் கொரோனா தடுப்பூசி 6வது சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், 36 ஆயிரத்து 648 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசு பள்ளிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் என 455 மையங்களில், 6வது தடுப்பூசி சிறப்பு முகாம் நடந்தது. இதில், 15 ஆயிரத்து 251 பேருக்கு முதல் டோஸ், 24 ஆயிரத்து 397 பேருக்கு இரண்டாம் டோஸ் என மாவட்டம் முழுவதும் 36 ஆயிரத்து 648 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என, கலெக்டர் ஸ்ரீதர் அறிவுறுத்தியுள்ளார்.