Begin typing your search above and press return to search.
கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனை செய்த 9 பேர் கைது: 3 கிலோ கஞ்சா பறிமுதல்
கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனை செய்த 9 பேரை போலீசார் கைது செய்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
HIGHLIGHTS

கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டவர்கள்.
கள்ளக்குறிச்சி போலீசார் மதியம், கள்ளக்குறிச்சி சித்தேரி கரை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படி நின்றிருந்த நான்கு வாலிபர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 1.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, நால்வரையும் கைது செய்தனர். இதேபோல, நாகையில் எஸ்.பி., அலுவலகம் அருகில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஐந்து பேரை போலீசார் கைது செய்து, 2.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.