Begin typing your search above and press return to search.
பவானி அருகே கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
பவானி அருகே கள்ளக்காதலி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த காடப்பநல்லூர் பரிசல் துறை பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன். தொழிலாளி. இவரது மனைவி பிரியா. இந்த நிலையில், ராமசந்திரன் வேறோரு பெண்ணுடன் தகாத உறவில் இருந்துள்ளார். இந்த உறவு பற்றி வெளியில் தெரியவே அந்த பெண் இவரை விட்டுபிரிந்து சென்றுள்ளார்.
இதனால், விரக்தியில் இருந்த ராமசந்திரன் நேற்று மாலை குடிபோதையில் வீட்டில் தூக்கிட்டு கொண்டார். உடனே அவரை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, பிரியா அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.