Begin typing your search above and press return to search.
பவானி அருகே வாய்க்காலில் முழ்கி முதியவர் உயிரிழப்பு
பவானி அருகே உள்ள காலிங்காராயன் வாய்க்காலில் குளிக்கும் போது, முதியவர் நீரில் முழ்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள காலிங்காராயன்பாளையத்தில் உள்ள வாய்க்காலில் முதியவர் ஒருவர் குளித்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக நீரில் முழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து, அப்பகுதியினர் சித்தோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், முதியவரின் சடலத்தை கைப்பற்றி யார் என விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவர் யார் என்ற விவரம் தெரியாததால், சடலத்தை பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், முதியவர் சட்டை பையில் தாராபுரத்தில் இருந்து வந்திருந்த, பேருந்து பயணச்சீட்டு இருந்தது. இதுகுறித்து, திருப்பூர் போலீசாருக்கு முதியவரின் போட்டோவை அனுப்பி சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.