/* */

கொடிவேரி தடுப்பணையில் நாளை (27-ம் தேதி) சுற்றுலா பயணிகளுக்கு தடை

பவானி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கொடிவேரி தடுப்பணையில் நாளை (சனிக்கிழமை) சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

கொடிவேரி தடுப்பணையில் நாளை (27-ம் தேதி) சுற்றுலா பயணிகளுக்கு தடை
X

கொடிவேரி அணை.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே பவானி ஆற்றின் குறுக்கே கொடிவேரி அணை வருகிறது. அங்கிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பவானிசாகர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று இரவு விடிய விடிய கனமழை கொட்டியதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால், பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றுக்கு இன்று மாலை 4 மணி நிலவரப்படி 1,700 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன்காரணமாக கொடிவேரி தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தண்ணீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதனைத்தொடர்ந்து கொடிவேரி அணை பகுதிக்குள் நாளை 27ம் தேதி (சனிக்கிழமை) சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On: 26 Aug 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நான் பாடும் மௌன ராகம் கேட்கவில்லையா? - ஒரு பக்க காதல் மேற்கோள்கள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ‘பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே... பார்த்ததாரும் இல்லையே!’ - தமிழில்...
  3. லைஃப்ஸ்டைல்
    எண்ணெய் குளியலில் இவ்வளவு விஷயங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்றவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  5. தொழில்நுட்பம்
    POCO X6 Neo: விலையால் அசத்தும் ஃபோன்!
  6. லைஃப்ஸ்டைல்
    ஒற்றை வரியில் வெற்றி மொழிகள்..!
  7. லைஃப்ஸ்டைல்
    அலைகளற்ற ஆழ்கடல், அப்பா..!
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் என்றால் ரொமான்ஸ் இல்லாமலா..?
  9. லைஃப்ஸ்டைல்
    ஆனியன் ரவா தோசை…எப்படி சாப்பிடணும் தெரியுமா?
  10. திருவண்ணாமலை
    சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு ரயில் சேவை துவக்கம்; மீண்டும்...