Begin typing your search above and press return to search.
கொடிவேரி தடுப்பணையில் 12வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதால் கொடிவேரி அணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் இன்று 12-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
HIGHLIGHTS
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, பவானி ஆற்றில் உபரிநீர் திறப்பால், கடந்த, 5ம் தேதி முதல், கொடிவேரி தடுப்பணையில், சுற்றுலா பயணிகள் நுழைய, குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இன்று காலை, 3,400 கன அடி தண்ணீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது. ஆனாலும் தடுப்பணையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், 12வது நாளாக இன்றும், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.