/* */

ஈரோடு மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை

தொடர்ந்து 9-வது நாளாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக ஈரோடு திகழ்கிறது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இன்று கொரோனா பாதிப்பு இல்லை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் தொடர்ந்து, இன்று 9வது நாளாக புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் இருந்த ஒருவரும் நேற்றுடன் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். இதனால் சுமார் 2 வருடங்களுக்கு பிறகு கொரோனா இல்லாத மாவட்டமானது ஈரோடு.

இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார். மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 667 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். 1 லட்சத்து 31 ஆயிரத்து 933 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 734 பேர் இறந்துள்ளனர்.

Updated On: 3 April 2022 2:15 PM GMT

Related News