/* */

சென்னிமலை செல்போன் கடையில் திருட்டு

சென்னிமலை அருகே செல்போன் கடையில் 40 ஆயிரம் மதிப்புள்ள 25 செல்போன்களை திருடி சென்ற மர்ம நபர்கள்.

HIGHLIGHTS

சென்னிமலை செல்போன் கடையில் திருட்டு
X

பைல் படம்.

பெருந்துறையை அடுத்த காஞ்சிக்கோவில் பகுதியை சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, வயது (36) . இவர் கடந்த 10 வருடங்களாக சென்னிமலை அருகே ஈங்கூரிலுள்ள சிப்காட் செல்லும் ரோட்டில் செல்போன் கடை வைத்துள்ளார். இவரது கடையில் நாகபட்டினத்தை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் கடையில் இருந்தவர்கள் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர்.

பின்னர் காலையில் கடையில் வேலை செய்யும் ராஜேஷ் வந்து கடையை திறந்தபோது கடையின் மேற்கூரை ஒடு பிரிக்கப்பட்டு இருந்தது. மேலும் கடையில் விற்பனைக்காக இருந்த 5 செல்போன்களும், பழுது நீக்குவதற்காக வாடிக்கையாளர்கள் கொடுத்திருந்த 20 செல்போன்கள் திருட்டு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.40 ஆயிரம் ஆகும். அதுதவிர பணப்பெட்டியில் எண்ணி வைக்காமல் வைத்திருந்த பணமும் காணாமல் போயிருந்தது. இதைத்தொடர்ந்து சத்தியமூர்த்தி சென்னிமலை போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Dec 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  2. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  3. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  4. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  5. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  6. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  8. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...
  9. லைஃப்ஸ்டைல்
    அண்ணன் தங்கை பாச கவிதைகள்!
  10. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் கவிதைகள்...!